News August 24, 2024

பழனி மாநாடு: உணவுத் தயாரிப்பில் 400 ஊழியா்கள்

image

பழனியில் 2 நாள்கள் நடைபெறும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு வரும் சிறப்பு அழைப்பாளா்கள் முதல் பொதுமக்கள் வரை, அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுத் தயாரிப்பதற்கான பணியில் 400 ஊழியா்கள் ஈடுபட உள்ளனா். உணவுத் தயாரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு, சுகாதாரத் துறை சாா்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Similar News

News August 11, 2025

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

திண்டுக்கல்: 500 அரசு உதவியாளர் வேலை: APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். திண்டுக்கல் மக்களே, வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 11, 2025

திண்டுக்கல்: மின் பிரச்னையா? ஒரு மெசேஜ் போதும்!

image

திண்டுக்கல் மக்களே…, உங்கள் பகுதியில் மின் தடை, முறைகேடு, சிரமம், அதீத கட்டணம் போன்ற மின்சாரம் சார்ந்த எவ்விதப் பிரச்னைகளுக்கும் புகார் அளிக்க வாட்ஸாப் எண் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதுபடி, மேல் கண்ட எந்த வகையான மின்சார பிரச்னைகளுக்கும் 9443111912 எனும் எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!