News August 23, 2024
திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு நடமாடும் மருத்துவமனை

திருவாரூர் மாவட்டத்தின் 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் பணிகளை மேற்கொள்வதற்காக ஐந்து நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தெரிவித்திருக்கிறார்.
Similar News
News September 12, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (செப்.12) இரவு 10 மணி முதல் இன்று(செப்.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 12, 2025
திருவாரூர்: உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம்

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை/தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு/பட்டய படிப்பு படித்த மாணவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் நல மையம் அமைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு https//www.tngrisnet.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
News September 12, 2025
திருவாரூர்: பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்த மாங்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு, இவர் கடத்தி வந்த 22 லிட்டர் மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.