News August 23, 2024
விழுப்புரத்திற்கு புதிய காவல் அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் இன்று பல்வேறு காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் மதுவிலக்கு பிரிவின் துணை கண்காணிப்பாளராக டி . கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார் . விழுப்புரம் மாவட்டத்தின் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவின் துணை கண்காணிப்பாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News December 19, 2025
விழுப்புரம்: DEGREE போதும் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்த, 18 முதல் 28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News December 19, 2025
விழுப்புரம்: கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி!

விழுப்புரம்: பரனூர் கிராமத்தை சேர்ந்த மாசி (53) என்பவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் வெளியே சென்ற மாசி, நேற்று காகாகுப்பம் பகுதியில் உள்ள பொது கிணற்றில் பிணமாக மிதந்தார். இந்நிலையில், தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் பாரதிராஜா, அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 19, 2025
விழுப்புரம்: மகளென்றும் பாராமல் கொல்ல முயன்ற தந்தை!

விழுப்புரம்: கண்டமானடியைச் சேர்ந்த பாபு (46) குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மகள் வைஷ்ணவியிடம் (16) சாப்பாடு செய்யவில்லையா? எனக் கேட்டு திட்டியுள்ளார். தனது மகளென்றும் பாராமல், சுவரில் முட்டி கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் படுகாயமடைந்த மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் நேற்று பாபுவை போலீசார் கைது செய்தனர்.


