News August 23, 2024
பழைய குற்றாலத்தில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவி பகுதியை வனத்துறையினர் வசம் ஒப்படைக்கவேண்டும் என தொடர்ந்து வனத்துறை கோரிக்கை விடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று(ஆக.,22) தென்காசி வந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பழைய குற்றாலம் அருவி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வன அலுவலர் முருகன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.
Similar News
News December 13, 2025
தென்காசி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் (9445000478, 9342595660) புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News December 13, 2025
தென்காசி: மதுபோதையால் தீ விபத்து.. தொழிலாளி பலி

திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழிலாளியான இவர் சில தினங்களுக்கு முன் மது போதையில் வீட்டில் கேஸ் அடுப்பு பற்ற வைக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக அவரது வேட்டியில் தீ பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த பாலமுருகன் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதமாக உயிரிழந்தார்.
News December 13, 2025
தென்காசி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

தென்காசி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04633-299544) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க


