News August 22, 2024

ஊட்டி: உயிரிழந்த வளர்ப்பு நாய்கள்

image

எமரால்டு பகுதியில் வளர்ப்பு நாய்கள் சில மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற விவசாயியின் தோட்டத்தில் எலிகளை கட்டுப்படுத்த மீன் துண்டுகளில் விஷம் வைத்ததும், அதை நாய்கள் உண்டு இறந்ததையும் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர் வனத்துறையினர். தொடர்ந்து அந்த நபரின் வீடு மற்றும் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டதில் கடமான் கொம்புகள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News

News August 14, 2025

நீலகிரி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

நீலகிரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News August 14, 2025

நீலகிரி: இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

image

நீலகிரி, உதகை அருகே குருத்துக்குளி கிராமத்தில் நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில், இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. செஞ்சிலுவை சங்க மருத்துவர் ஜெய்னாஃ பத்திலா தங்கள் குழுவினருடன் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை வழங்கினார். செஞ்சிலுவை சங்க தலைவர் கே. கோபால், செயலாளர் மோரிஸ் சாந்தா குருஸ், முன்னாள் தலைவர் கே.ஆர்.மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

News August 14, 2025

தையல் பயிற்சி நிலையம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், நகர வாழ்வாதார மையத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தையல் பயிற்சி நிலையம் உள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று தையல் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

error: Content is protected !!