News August 22, 2024

தமிழகத்தில் அதிகரிக்கும் தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு

image

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தேசிய தூய்மை பணி ஆணையர் தலைவர் வெங்கடேசன், தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபடும் போது அதிகம் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முறையான விழிப்புணர்வு இல்லாததே காரணம் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உடனிருந்தார்.

Similar News

News September 9, 2025

திருவள்ளுர்: இணைய வழி மோசடி- கொத்தாக கைது

image

திருவள்ளூர் வேப்பம்பட்டு சேர்ந்த பிஜியின் ஹரால்ட் ராமசாமி, வாட்ஸ்அப் வந்த வர்த்தக விளம்பரத்தை நம்பி, ஆன்லைன் வர்த்தக தளத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என முதலீடு செய்துள்ளார். ரூ.10,25,200/- அனுப்பி பணத்தை திரும்ப எடுக்க முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இணையவழி குற்றப்பிரிவு போலீசார் சிவகங்கை சேர்ந்த 5பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 9, 2025

BREAKING: திருவள்ளூர் வரும் விஜய்

image

2026 ஆண்டு சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும்.13ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் செப்.27-ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். (SHARE)

News September 9, 2025

திருவள்ளூர்: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க

image

திருவள்ளூர் மக்களே, வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!