News August 22, 2024
அத்திக்கடவு- அவிநாசி திட்ட குழாயில் உடைப்பு

அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடங்கிய 5 நாள்களில், சத்தியமங்கலம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் குழாயின் ஏர்வால்வில் உடைப்பு ஏற்பட்டது. இதில் தண்ணீர் பீறிட்டு வெளியேறிய போது, அவ்வழியாக பைக்கில் சென்ற 2 பேர் தண்ணீரில் வழுக்கி விழுந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதனால், பைக்கில் சென்ற 2 பேர் காயமடைந்தனர். எனவே, குழாய் உடைப்பு சரி செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News August 16, 2025
ஈரோட்டில் இலவச Tally பயிற்சி!

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GST பயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <
News August 16, 2025
புளியம்பட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை

புஞ்சைப் புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி, சுப்பிரமணியர் கோவிலில், கால பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலபைரவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
News August 16, 2025
ஈரோடு: 500 அரசு உதவியாளர் வேலை: நாளையே கடைசி

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.22405 முதல் ரூ.62265 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நாளை ஆக.17க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <