News August 21, 2024

பள்ளி பேருந்து மோதி வாலிபர் பலி

image

அக்ராபாளையம் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி பேருந்துகள் இன்று மாலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு போட்டி போட்டுக் கொண்டு ஆரணி- வேலூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே டூவிலரில் வந்த ஆரணி இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ் என்ற வாலிபர் மீது பள்ளிப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார். இதையடுத்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News August 24, 2025

தி.மலை வருவாய்த்துறை சங்கங்களின் கோரிக்கை மாநாடு

image

திருவண்ணாமலையில் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை மாநாடு (ஆக. 23) நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊழியர்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணி பளுவை குறைத்தல், தனி ஊதியம் வழங்குதல், வெளிமுகமை, தொகுப்பூதிய நியமனத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

News August 24, 2025

தி.மலை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

தி.மலை மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 24, 2025

தி.மலை: பாலத்தில் மதுகுடித்தவர் கீழே விழுந்து சாவு

image

ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரகு நாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50), கட்டிட மேஸ்திரி. இவர், அந்த பகுதியில் உள்ள சிறு பாலத்தின் மீது அமர்ந்து மதுகுடித்த போது, தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்து வந்த ஆரணி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததனர்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!