News August 21, 2024
குரங்கு காய்ச்சலை எதிர்கொள்ள அரசு தயார்: மா.சு.

குரங்கு காய்ச்சலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை மினிஸ்டர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது என்றார். சென்னை ராஜீவ்காந்தி ஹாஸ்பிடலில் 10 படுக்கை கொண்ட வார்டு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 20, 2026
‘ஜன நாயகன்’ ரிலீஸ்.. தேர்தல் அதிகாரியின் அப்டேட்!

ஆட்சேபனை காட்சிகள் அதிகம் இருந்தால் ‘ஜன நாயகன்’ வெளியீட்டை ஒத்திவைக்க முடியும் என Ex தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி தெரிவித்துள்ளார். அவசியப்பட்டால் பட காட்சிகளை நீக்கலாம் என்று கூறிய அவர், படத்தில் உள்ள கருத்தை பொறுத்தே அதனை முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். படத்தின் மறு ஆய்வு முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு படம் அனுப்பப்பட்டுள்ளது.
News March 20, 2026
மகளிர் உரிமை தொகை ₹1,500.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலையொட்டி, 10 முக்கிய வாக்குறுதிகளை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ₹1,000-ஆக உள்ள மகளிர் உரிமைத் தொகை பொதுப்பிரிவு மகளிருக்கு ₹1,500 ஆகவும், SC/ST பிரிவு மகளிருக்கு ₹1,700 ஆகவும் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல, வேலைதேடும் இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ₹1,500 தொடர்ந்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
News March 20, 2026
‘நான் சாகப் போகிறேன்’

‘நான் எங்கேயோ, யார் கூடயோ போறேன்னு சொல்ற. நான் உனக்கு மனசால கூட துரோகம் நினைக்கல. ஆனா, நீ என்ன நம்பல. நான் ஒரு நல்ல முடிவ எடுத்து இருக்கேன். கடைசி வர உன்கூட தான் இருப்பேன். I LOVE YOU’. தாம்பரம் அருகே இளம்பெண் அபிநயா(30) தனது கணவன் அருண் குமாருக்கு கடைசியாக அனுப்பிய மெசெஜ் இது. தனது நடத்தையில் கணவன் சந்தேகப்பட்டதால், திருமணமான மூன்றே மாதத்தில் அபிநயா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகம்.


