News August 21, 2024
தமிழகத்தில் நிம்மதியாக தொழில் செய்ய முடியும்

இன்று தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.51,157 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “கடந்த 3 ஆண்டுகளில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். இதன் மூலம் 6.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் நிம்மதியாக தொழில் நடத்தலாம் என்கிற நம்பிக்கைதான் இந்த வெற்றிக்கு காரணம்” என பெருமிதத்துடன் கூறினார்.
Similar News
News March 22, 2026
கரூரில் அதிமுக 40,000 ஓட்டுகள் கூட வாங்காது: செந்தில் பாலாஜி

கரூரில் அதிமுக அபார வெற்றி பெறும் என EX மினிஸ்டர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியிருந்தார். அதற்கு, கரூரில் இருக்கிற 4 தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வி அடையும் என்று செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். தற்போதைய கள நிலவரப்படி, கரூரில் அதிமுக 40 ஆயிரம் வாக்குகளை தாண்டாது எனக்கூறிய அவர், தங்களை (திமுக) போன்று செயல்பட முடியாததை மறைப்பதற்காக தேர்தல் பரப்புரை தொடர்பாக புகார் அளிக்கப்படுவதாகவும் விமர்சித்தார்.
News March 22, 2026
மளமளவென சரிந்தது.. வரலாற்றில் முதல்முறை

மேற்கு ஆசிய நாடுகளில் போர் சூழல் நிலவும் நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக ₹94.01 ஆக சரிந்துள்ளது. இதற்கு வெளியேறி வரும் வெளிநாட்டு முதலீடுகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கூறப்படுகிறது. எனவே, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
News March 22, 2026
அந்த 2 மணி நேரம் மிக முக்கியம்.. இல்லன்னா கஷ்டம்

நீங்கள் சைபர் மோசடியில் பணத்தை இழக்க நேர்ந்தால் பதற்றமடைய வேண்டாம். உடனடியாக 1930 (அ) CyberCrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். அப்போது மோசடியாளர்கள் செய்த பரிவர்த்தனையை பற்றி வங்கியிடம் கூறி உங்கள் கணக்கை முடக்க சொல்லுங்கள். மோசடி நடந்த 1-2 மணி நேரம் தான் மிக மிக முக்கியம். இந்த நேரத்திற்கு நீங்கள் புகாரளித்தால் பணத்தை மீட்பதற்கான வாய்ப்பு அதிகம். SHARE.


