News August 21, 2024

சென்னையில் 19 உதவி ஆணையர்கள் இடமாற்றம்

image

சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்களை பணியிட மாறுதல் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அவர்களில் செம்பியம் உதவி ஆணையர் பிரவீன் குமாரும் ஒருவர். அவர், சென்னை காவல்துறை பாதுகாப்புப் பிரிவு உதவி ஆணையராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையை அடுத்து புளியந்தோப்பு காவல் உதவி ஆணையர் மாறுதல் செய்யப்பட்டார். இதன்பிறகு, செம்பியம் உதவி ஆணையரும் மாற்றப்பட்டுள்ளார்.

Similar News

News March 24, 2026

BREAKING: தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

image

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். திமுக ஒதுக்க முன்வந்த தொகுதிகளின் எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு செய்த பரிந்துரையும் மநீம உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என அவர் கூறியுள்ளார். எனினும், திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக, TN & புதுச்சேரியில் போட்டியிட டார்ச் லைட் சின்னத்தை மநீம பெற்றிருந்தது.

News March 24, 2026

பிலிப்பைன்ஸில் எரிபொருள் அவசரநிலை பிறப்பிப்பு

image

மத்திய ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், நாட்டில் எரிபொருள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. இதுவே உலகின் முதல் எரிபொருள் அவசர நிலையாகும். பெர்சியன் வளைகுடா பகுதிகளில் இருந்தே 98% கச்சா எண்ணெய்யை பிலிப்பைன்ஸ் பெறுகிறது.

News March 24, 2026

தாமரை சின்னத்துடன் சீட்டை உறுதி செய்தார் திருமாறன்

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பியூஷ் கோயல் உடனான பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் திருமாறன் இதை உறுதி செய்தார். 2 தொகுதிகள் கேட்டிருந்த நிலையில், ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!