News August 21, 2024
BREAKING ஈரோட்டில் 3,400 பேருக்கு வேலை

தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கிவைத்தார். மேலும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். அதன்படி, ஈரோட்டில் Milky Mist நிறுவனத்தில் ரூ.500 கோடியில் 3,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் Enes Textile திட்டம் ஈரோட்டில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 6, 2026
சட்டமன்றத் தேர்தல் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதையொட்டி, கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
News March 5, 2026
ஈரோடு: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News March 5, 2026
ஈரோடு: பட்டா வைத்திருப்போருக்கு GOOD NEWS!

ஈரோடு மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0424-2222500 அணுகலாம். SHARE பண்ணுங்க!


