News August 21, 2024
சிறு, குறு நடுத்தர தொழில் சிறப்பு கடன் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் நிதிக்கலகமாகும். திருப்பூர் மாவட்ட தொழில் முதலீட்டு கழகம் திருப்பூர் குமார் நகர் தீயணைப்பு நிலையம் அருகே உள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் கடந்த 19ஆம் தேதி முதல் அடுத்த மாதம் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்தவராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 8, 2026
பல்லடம் அருகே பயங்கர தீ விபத்து!

பல்லடம் அடுத்த அருள்புரம் பாச்சான்காட்டுபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் டையிங் நிறுவனத்தில் நேற்று திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து வேலை செய்து வந்த பணியாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர்.
News March 8, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்! GOOD NEWS

திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறாதவர்களுக்கு செப்டம்பர் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவரே உத்தரவிட்டுள்ளார். இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக அந்தந்த பிறப்புப் பதிவு அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு, ரூ.200 கட்டணம் செலுத்தி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 7, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்.07) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.


