News August 21, 2024
ஈரோட்டில் 235 சவரன் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது

ஈரோட்டில் ஜூன் 8ம் தேதி ஆடிட்டர் சுப்பிரமணி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் 235 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இந்த வழக்கில் ஆடிட்டரின் கார் ஓட்டுநர் உள்பட 5 பேரை ஏற்கனவே கைதுசெய்த போலீசார் 132 சவரன் நகை, ரூ.45 லட்சத்தை பறிமுதல்செய்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான நரசிம்ம ரெட்டியை கைதுசெய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Similar News
News March 8, 2026
பெருந்துறையில் களமிறங்கும் இபிஎஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் இதுவரை 190 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி காஞ்சிகோவில் ரோட்டில் அவர் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, நாளை மாலை 5.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் பவானியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
News March 8, 2026
ஈரோடு அருகே பயங்கர விபத்து!

ஈரோட்டில் பிளஸ்-1 படித்து வந்த மாணவர் சர்வின், தனது நண்பர் ஜெயன் என்பவருடன் பின்னால் அமர்ந்து சென்றபோது, வில்லரசம்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியது. இந்த விபத்தில் சர்வின் உயிரிழந்தார். ஸ்ரீஜெயன் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்
News March 8, 2026
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று (07.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


