News August 21, 2024

கண்மாய் தூர்வார தீவிரம் காட்டும் ஆர்வலர்கள்!

image

சிவகாசி பள்ளபட்டி கடம்பன்குளம் கண்மாயை தன்னார்வலர்கள் மூலமாக தூர்வாறிட விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகாசி பசுமை மன்றத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள தூர்வாரும் பணிகள் குறித்து இன்று சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் கண்மாய் பகுதியில் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார்.

Similar News

News October 18, 2025

BREAKING விருதுநகரில் 8 போலீசார் மீது நடவடிக்கை

image

விருதுநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் பட்டாசு கடை நடத்தி வருவதாக புகார் எழுந்ததால் எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலிசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து சீனிவாசன், தங்கமுத்து, பழனியப்பன், முருகேசன், சக்திவேல் நெல்லைக்கும், முத்து மாரியப்பன், அயோத்தி ராமசந்திரன், உதயக்குமார் தூத்துக்குடிக்கு மாற்றம் செய்து ஐஜி பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.

News October 18, 2025

BREAKING அருப்புக்கோட்டையில் தீபாவளியால் விலை உயர்வு

image

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டி மிகவும் பிரபலமானது. இந்நிலையில் இன்று (அக்.18) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதில் மல்லிகை ரூ.1,800 , கனகாம்பரம் ரூ.1,000, முல்லை ரூ.1,500, பிச்சி ரூ.1,000 என விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பன்னீர் ரோஸ் கிலோ ரூ.200, மிட்டாய் ரோஸ் கிலோ ரூ.150, மரிக்கொழுந்து ரூ.100 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

News October 18, 2025

திருச்சுழி: காரில் கடத்திச் சென்ற 2 பேருக்கு குண்டாஸ்

image

குருந்தங்குளத்தில் கடந்த மாதம் தந்தை, மகனை காரில் கடத்தி ரூ.25,000 பணம் பறித்த வழக்கில் செம்பொன்நெருஞ்சியை சேர்ந்த லெட்சுமணன், வீரசூரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் லெட்சுமணன், வீரசூரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி கண்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்‌.

error: Content is protected !!