News August 20, 2024
நகர்புற வீடற்றவர்களை அரவணைக்கும் சென்னை

அரவணைக்கும் சென்னை என்ற திட்டத்தின் கீழ், சென்னையில் வீடற்று சாலைகளில் வசிக்கும் ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என அனைவருக்கும் பல உதவிகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. குறிப்பாக, தற்காலிக காப்பகங்கள், திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகள் வழங்குதல், உள்ளிட்டவைகள் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சி இந்த உதவிகளுக்கான எண்களை 1913 மற்றும் 044-25303849 வெளியிட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
சென்னை: B.Sc, BE, B.Tech, BCA படித்தவர்களா நீங்கள்?

சென்னை மக்களே ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். <
News September 18, 2025
சென்னை மக்களே செப்.30 வரை கெடு…!

சென்னை நகராட்சி அதிகாரிகள் அனைத்து சொத்து உரிமையாளர்களுக்கும் செப்டம்பர் 30-க்குள் சொத்து வரியை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். 1% தனி வட்டியை தவிர்க்க, வரியை உரிய நேரத்தில் செலுத்துவது அவசியம். கட்டணம் செலுத்த, QR கோடு ஸ்கேன் செய்வதோடு 9445061913 வாட்ஸ்அப் சேவையும் பயன்படுத்தலாம். இது எளிதாகவும் விரைவாகவும் பணத்தை செலுத்த உதவுகிறது. SHARE NOW!
News September 18, 2025
சென்னை: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? செம்ம ஈஸி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.