News August 20, 2024
புதுவை நபரிடம் ரூ.39.02 லட்சம் மோசடி

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த சபரி கிரிஜா என்பவரை மர்ம நபர் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதைநம்பி சபரி கிரிஜாவும் மர்ம நபர் அனுப்பிய இணையதளத்தில் ரூ.39.02 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
புதுச்சேரி: ஜிப்மரில் புதிய நோயாளிகள் தங்குமிடம் திறப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் தங்குவதற்காக, ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய தங்குமிடம் (Patient Shelter) திறந்து வைக்கப்பட்டது. ஜிப்மர் இயக்குனர் டாக்டர் வீர் சிங் நெகி, கோத்தி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சஞ்சய் கோத்தி மற்றும் சுமித்ரா கோத்தி ஆகியோர் இணைந்து இதனைத் திறந்து வைத்தனர்.
News March 7, 2026
புதுவை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

புதுவை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 7, 2026
புதுவை: கூடுதல் தொகுதிகள் கோரும் திமுக!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று (மார்ச் 06) எல்லைப்பிள்ளைச்சாவடி பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதையும், கடந்த தேர்தலை விட இம்முறை கூடுதல் தொகுதிகளை கூட்டணியில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


