News August 20, 2024
அரசு விழாவில் அமைச்சர் பெயர் புறக்கணிப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்திற்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஊராட்சி கட்டிடத்தின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் விழுப்புரம் மாவட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெயர் அழைப்பிலும், கட்டிடப் பணி முடிக்கப்பட்ட கல்வெட்டிலும் இடம்பெறவில்லை. இதனால் சில கவுன்சிலர்கள் அதிருப்தியில் நிகழ்ச்சியை புறக்கணித்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
Similar News
News March 13, 2026
விக்கிரவாண்டி அருகே துடிதுடித்து பலி!

நெய்வேலியைச் சேர்ந்தவர் மோகன்(20). இவர், விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவரும், இவரது நண்பர் சரத்(20) என்பவரும் பைக்கில் விழுப்புரம் நோக்கிச் சென்றனர். பைக்கை சரத் ஓட்டினார். அப்போது, முண்டியம்பாக்கம் அருகே முன்னால் சென்ற டிராக்டர் திடீரென திரும்பியதால், இவர்களது பைக் மோதி விபத்திற்குள்ளானது. இதில், மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News March 13, 2026
விக்கிரவாண்டி அருகே துடிதுடித்து பலி!

நெய்வேலியைச் சேர்ந்தவர் மோகன்(20). இவர், விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவரும், இவரது நண்பர் சரத்(20) என்பவரும் பைக்கில் விழுப்புரம் நோக்கிச் சென்றனர். பைக்கை சரத் ஓட்டினார். அப்போது, முண்டியம்பாக்கம் அருகே முன்னால் சென்ற டிராக்டர் திடீரென திரும்பியதால், இவர்களது பைக் மோதி விபத்திற்குள்ளானது. இதில், மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News March 13, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


