News August 20, 2024
பிரதமர் நரேந்திர மோடியின் மூத்த சகோதரர் புதுச்சேரி வருகை

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மூத்த சகோதரர் சோம்பாய் மோடி இன்று புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். இவரை புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி, நாராயணன் ஆகியோர் பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
Similar News
News March 5, 2026
புதுச்சேரி: இட ஒதுக்கீடு கோரி ஆளுநரிடம் மனு

புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் தலைமையில், செயலாளர் புருஷோத்தமன் மற்றும் மத்திய அரசின் விருதாளர் ஆதவன் ஆகியோர் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்களை நேரில் சந்தித்தனர். பழங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான இலவச மனைப்பட்டா மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கக் கோரி இந்த சந்திப்பின் போது அவர்கள் மனு அளித்தனர்.
News March 5, 2026
புதுவை: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News March 5, 2026
புதுச்சேரி: தேமுதிக & நாதகவுக்கு சின்னம் ஒதுக்கீடு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதன்படி, தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாதகவுக்கு வழக்கம்போல் விவசாயி சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் இரு கட்சிகளும் தங்களது பாரம்பரிய சின்னங்களுடன் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


