News August 20, 2024
செரிமானக் கோளாறுகளை தீர்க்கும் திருநீற்றுப்பச்சிலை

மழைக்காலத்தில் ஏற்படும் செரிமானக் கோளாறு உள்ளிட்ட குடல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றல் திருநீற்றுப்பச்சிலைக்கு இருப்பதாக குணவாகடப் பாடல் கூறுகிறது. யுஜெனால், லினாலூல், ஜெரானியால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள அதன் இலைகளிலிருந்து சாறு எடுத்துத் தேனுடன் கலந்து செய்யப்படும் மருந்தை உரிய வகையில் உண்டால், அலர்ஜியால் ஏற்படும் சுரம், வாந்தி, தேமல், படை போன்ற நோய்களும் நீங்குமாம்.
Similar News
News March 18, 2026
நடிகைகளுக்கு குடும்பம் இருக்கும்: இயக்குநர் அமீர்

நடிகை நயன் தாரா குறித்து <<19407643>>C.V. சண்முகம் <<>>பேசியது சர்ச்சையான நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கும் என்பதை மறந்துவிட்டு அரசியல் மேடைகளில் அவர்களைப் பற்றி தவறாக பேச வேண்டாம் எனவும், நாகரிக அரசியலை பழகுங்கள் அரசியல்வாதிகளே எனவும் இயக்குநர் அமீர் அறிவுறுத்தியுள்ளார்.
News March 18, 2026
வாரிசு அரசியலுக்கு தேர்தலில் முற்றுப்புள்ளி: R.B.உதயகுமார்

மன்னராட்சியின் சிந்தனையில் இருக்கிற திமுக ஆட்சிக்கு நாம் முடிவுரை எழுத வேண்டும் என R.B.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு இன்றைக்கு முன்னுரிமை கொடுத்து பதவிகள் வழங்கப்படுதை மக்கள் உன்னிப்பாக கவனிப்பதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 இருக்கும் எனவும் கூறியுள்ளார். திமுகவில் வாரிசுகள் மட்டுமே அதிகார மையங்களாக உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News March 18, 2026
புதுமைப்பித்தன் பொன்மொழிகள்

*நம்பிக்கை என்பது ஒரு அழகான கண்ணாடி; அது உடைந்தால் பிம்பங்கள் சிதறிவிடும். *கற்பனை என்பது வாழ்க்கையின் நிழல் அல்ல; அது வாழ்க்கையின் மற்றொரு முகம். *வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல ஒரு நேர்க்கோடு அல்ல; அது பல வளைவுகளைக் கொண்ட ஒரு பாதை. *பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது உலக நீதி, ஆனால் பழையனவற்றின் வடுக்கள் மறைவதே இல்லை.


