News August 20, 2024
சென்னையில் ரவுடி ஆசைத் தம்பி கொலை

சென்னையில் பிரபல ரவுடி ஆசைத்தம்பி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.கே.பி. நகரைச் சேர்ந்த இவர், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவரும், சரித்திர குற்றப்பதிவேடு குற்றவாளியும் ஆகும். இந்நிலையில், தலையில் கடப்பா கல்லை போட்டு மர்மமான முறையில் இவர் கொல்லப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றிய எம்.கே.பி. நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
சென்னை: ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

சென்னை மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்க
News September 18, 2025
சென்னை ஆணையரகத்தில் நடிகர் பாலா மீது புகார்

நடிகர் பாலா மீதும், காந்தி கண்ணாடி படக்குழு மீதும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, காந்தி கண்ணாடி திரைப்படத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாகக் கூறி, சிவசேனா கட்சியினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனர் ஷெரீப், நடிகர் கேபிஒய் பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
News September 18, 2025
சென்னை: B.Sc, BE, B.Tech, BCA படித்தவர்களா நீங்கள்?

சென்னை மக்களே ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். <