News August 20, 2024
திருவள்ளூரில் லஞ்சம் வாங்கிய மின் பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை

மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின் பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் 2014 ஆம் ஆண்டு புதிய வீட்டிற்கான மின் இணைப்புக்காக, அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணிப்பித்தார். அங்கு உதவி பொறியாளராக பணியாற்றி வந்த சுகுமார் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார். இந்த வழக்கில் நேற்று நீதிபதி மோகன் தீர்ப்பளித்தார்.
Similar News
News March 13, 2026
JUST IN: கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமை!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 45 வயது பெண், கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, மூன்று பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து புகாரில், கும்மிடிப்பூண்டி மகளிர் போலீசார் ரஞ்சித், அவரது தம்பி முத்துகிருஷ்ணன், துளசிராமன் ஆகியோரை கைது செய்தனர்.
News March 13, 2026
திருவள்ளூர் பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!
News March 13, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்தொடர்பான குறைதீர் முகாம் நாளை(மார்ச் 14) மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் இருந்தால் கலந்துகொண்டு பயனடையலாம். மேலும், வரும் 25ஆம் தேதிக்குள் கை விரல் ரேகையை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


