News August 19, 2024
பாலியல் புகாரில் கடும் நடவடிக்கை தேவை: கனிமொழி

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார். பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இனியும் இதுபோன்ற மனிதத் தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் கடுமையான நடவடிக்கை தேவை எனக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிவராமன் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News March 12, 2026
விவசாயிகளுக்கு ₹2,000.. வந்தாச்சு HAPPY NEWS

நாடு முழுவதும் 9.32 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நாளை <<19356874>>தலா ₹2,000<<>> டெபாசிட் செய்யவுள்ளது. PM KISAN திட்டத்தின் 22-வது தவணை தான் அது. இந்நிலையில், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். e-KYC மற்றும் பிற தகவல்கள் முழுமையடையாத பயனாளிகளுக்கு பணம் கிடைப்பதில் சிக்கல் வருமாம். அதனால், PM KISAN போர்ட்டலில் உடனே பணிகளை முடியுங்கள். SHARE IT
News March 12, 2026
8 வருஷமா டார்ச்சர் பண்றாங்க.. ரஷ்மிகா வேதனை!

கடந்த 8 ஆண்டுகளாக வந்த வதந்திகளை கண்டுகொள்ளவில்லை என்றாலும், கடந்த 24 மணிநேரத்தில் அது மிகவும் அதிகரித்துள்ளதாக ரஷ்மிகா வேதனை தெரிவித்துள்ளார். இனிமேல் தாங்க முடியாது, அடுத்த 24 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய ஆடியோ நீக்கப்படாவிட்டால், வழக்கு தொடரப்போவதாக ரஷ்மிகா எச்சரித்துள்ளார். முன்னதாக, ரக்ஷித் ஷெட்டி குறித்து ரஷ்மிகாவின் தாயார் கடுமையாக விமர்சித்திருந்த ஆடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
News March 12, 2026
WFH.. லாக்டவுன் போல மாறும் சூழல்!

TN-ல் சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் HCL நிறுவனம், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற(WHF) வழங்கியுள்ளது. ஊழியர்களை அழைத்து வரும் Cab, பஸ்களில் எரிபொருள் நிரப்புவதில் நிலவும் சிக்கல், கம்பெனி கேன்டீன்களில் சமைக்க முடியாத நிலை ஆகியவற்றால் WFH முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கொரோனா ஊரடங்கு போன்ற சூழல் மீண்டும் வந்துவிட்டதாக பொதுமக்கள் எண்ணுகின்றனர்.


