News August 19, 2024

கோலி, ரோஹித்துக்கு ஓய்வு ஏன்? கவாஸ்கர் கேள்வி

image

கோலி மற்றும் ரோஹித் இருவரும் துலீப் கோப்பை தொடரில் ஏன் விளையாடவில்லை என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், இருவரும் வங்கதேச தொடரில் பயிற்சி எடுக்காமலேயே களமிறங்க உள்ளதாக கூறிய அவர், அணியின் நலனுக்கு அது உகந்ததாக இருக்காது என்றும் அதிருப்தி தெரிவித்தார். 35 வயதை கடந்த வீரர்கள் தொடர்ந்து விளையாடுவது, அவர்களின் தரத்தை உயர்த்த பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.

Similar News

News March 16, 2026

தவெகவினரால் மன உளைச்சல்: ஜூலி

image

விஜய் கூறிய குட்டிக் கதை குறித்து கருத்து தெரிவித்த ஜூலியை SM-ல் தவெகவினர் தொடர்ச்சியாக திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தவெக நிர்வாகி உள்பட 8 பேர் மீது ஜூலி புகாரளித்துள்ளார். அதில், தனக்கு கிட்னி மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதாக தவெகவினர் வீடியோ வெளியிட்டதால், மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

NDA-தவெக கூட்டணி? காத்திருக்கும் பாஜக

image

NDA-தவெக இடையே பேச்சுவார்த்தை நடக்கவில்லை என இருதரப்புமே அதிகாரப்பூர்வமாக மறுத்துவிட்டனர். ஆனாலும், கூட்டணிக்கு விஜய் வந்தால் வெற்றி உறுதி என கருதும் பாஜக, தொடர் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மார்ச் 30-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குவதால், அதற்குள் எப்படியாவது விஜய்யை தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என பாஜக காய் நகர்த்துகிறதாம்.

News March 16, 2026

கடன் தள்ளுபடி.. அரசு வெளியிட்ட தகவல்

image

கடந்த 11 ஆண்டுகளில் ₹9.75 கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அதிகபட்சமாக 2020 நிதியாண்டில் ₹1.59 லட்சம் கோடியும், குறைந்தபட்சமாக 2025 நிதியாண்டில் ₹47,568 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டது என்றார். 2025 நிதியாண்டு முதல் வாராக்கடன் தள்ளுபடி தொகை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!