News August 19, 2024

பூமிக்கு மிக அருகில் வரும் சிறுகோள்

image

2024 JV33 சிறுகோள், பூமிக்கு மிக அருகில் இன்று கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சுமார் 620 அடி விட்டம் கொண்ட இந்த சிறுகோள், சுமார் 28.5 லட்சம் மைல் தொலைவில் பூமியை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியை அடிக்கடி கடந்து செல்லும் வகையை சேர்ந்த இந்த சிறுகோள், மணிக்கு 24,779 மைல் வேகத்தில் விண்வெளியில் பயணித்து வருகிறது. இதனை விஞ்ஞானிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

Similar News

News August 15, 2025

கடலூர்: 47 அரசு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’47’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து, வரும் ஆக.29-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.96,000 வரை வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 15, 2025

மதச்சார்பின்மை நீடிக்க சுதந்திர தின வாழ்த்துகள்: விஜய்

image

மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க, அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் எனவும் தனது X தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக <<17409232>>CM ஸ்டாலின்<<>>, EPS உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News August 15, 2025

குறைபாடு திறமையில் இல்லை.. சாதனை மங்கை துளசிமதி

image

இடதுகையின் பிறவிக் குறைபாட்டால் கட்டை விரலை இழந்தார் அந்தப் பெண். எதிர்பாரா விபத்தால் இடதுகை இயக்கமே கட்டுக்குள் வந்த நிலையிலும், பக்கபலமாக நின்றார் அவரது தந்தை. தனது விடாமுயற்சியால் ஆசிய பாரா போட்டிகளில் பேட்மிண்டனில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் வென்று திறமையை நிரூபித்தார். இப்படிப்பட்ட சாதனை மங்கையான துளசிமதி முருகேசனுக்கு TN அரசு ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.

error: Content is protected !!