News August 19, 2024
நாளை முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது. போட்டோவுடன் கூடிய வோட்டர் லிஸ்ட் திருத்த பணிகளை எலெக்ஷன் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்காக நாளை முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை, அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஓட்டர் லிஸ்ட் சரிபார்த்தல், முரண்பாடுகளை களைதல், தரமான PHOTO இணைத்தல் போன்ற பணிகள் செய்யவுள்ளனர். 2025 ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
Similar News
News March 19, 2026
மெத்தனப்போக்கில் திமுக அரசு: அண்ணாமலை

<<19356260>>விளாத்திகுளம் கொடூரம் <<>>பற்றிய உண்மையை மக்களுக்கு CM ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தனது X பதிவில், கைதாகியுள்ள <<19424645>>தர்ம முனீஸ்வரன்<<>> ஒரு ஆயுள் தண்டனை குற்றவாளி என்றும், அவருக்கு SC-ல் ஜாமின் கிடைக்கும் அளவுக்கு திமுக அரசு வழக்கை மெத்தனமாக கையாண்டிருப்பதாகவும் சாடியுள்ளார். ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளியை TN போலீஸ் கண்காணிக்க தவறியதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
News March 19, 2026
தமிழக தேர்தல்.. அதிரடியாக மாற்றம் செய்தது ECI

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றங்களை ECI அறிவித்துள்ளது. அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகம், மின் வாரியம், போக்குவரத்து காவல், சிறைத்துறை, தீயணைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய அரசுத் துறை ஊழியர்களும் இனி தபால் மூலம் வாக்கு செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
News March 19, 2026
அண்ணன் சீர் சொந்த பணத்தில் கொடுங்கள்: சீமான்

நாதக தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது விஜய்யை சீமான் விமர்சித்து பேசியுள்ளார். என் தம்பி அறிவித்த இலவசங்களுக்கே மாதம் ₹1 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இப்பணத்தை எங்கிருந்து கொடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். அண்ணன் சீர், மாமன் சீர் என அனைத்தையும் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 1 பவுன் தங்கம், பட்டு சேலை அடங்கிய அண்ணன் சீர் திட்டத்தை விஜய் வாக்குறுதியாக அளித்துள்ளார்.


