News August 19, 2024
மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் அவதி

கொல்கத்தாவில் கடந்த 8ஆம் தேதி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் தொடர்ந்து 8ஆவது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
Similar News
News August 15, 2025
அணுஆயுத போர் என்னால் தடுக்கப்பட்டது: டிரம்ப்

கடந்த 6 மாதங்களில் 6 போர்களை, தான் நிறுத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது 6 -7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தான் தலையிடவில்லை என்றால் அது அணுஆயுத போராக வெடித்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா காரணம் அல்ல என இந்தியா மறுத்தாலும், பேசும் இடங்களிலெல்லாம் தானே போரை நிறுத்தியதாக டிரம்ப் தம்பட்டம் அடித்து வருகிறார்.
News August 15, 2025
GALLERY: PM மோடியும்.. சுதந்திர தின தலைப்பாகையும்!

ஒவ்வொரு ஆண்டும் PM மோடி, சுதந்திர தினத்தில் கொடியேற்றும் போது, அவரின் தலைப்பாகை தனி கவனம் பெறுகிறது. ராஜஸ்தானி தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள அவர், அதன் நிறத்தை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் மாற்றுகிறார். 5 மீட்டர் துணியில் தயாரிக்கப்படும் இந்த தலைப்பாகை சுயமரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது. 2014- 2025 வரை PM மோடி அணிந்த தலைப்பாகைகளை மேலே அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம்.
News August 15, 2025
வைரமுத்து ‘Me too’ குற்றவாளி: ஒருமையில் சாடிய H.ராஜா

வைரமுத்து ஒரு ‘Me too’ குற்றவாளி, அவர் மீது பல பெண்கள் புகார் அளித்துள்ளதாக H.ராஜா கடுமையாக சாடியுள்ளார். திமுக ஆட்சி என்பதால் வைரமுத்து இன்னும் கைது செய்யப்பட்டவில்லை என்றும் விமர்சித்துள்ளார். ராமரை அவமரியாதையாக பேசிய வைரமுத்து ஒரு மனநோயாளி எனவும் அவரை ஒருமையில் சாடியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் <<17369941>>வைரமுத்து ராமரை இழிவுபடுத்தியதாக <<>>ஏற்கெனவே போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.