News August 19, 2024
மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் அவதி

கொல்கத்தாவில் கடந்த 8ஆம் தேதி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் தொடர்ந்து 8ஆவது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
Similar News
News March 25, 2026
காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை: EPS

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்குவது கவனம் ஈர்த்துள்ளது. ஏற்கெனவே 2021-ல் இதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் இதனை தற்போது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். ஆனால், இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. 2025-ல் HC இந்த உத்தரவை தலைமைக்காவலர் வரை முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டது.
News March 25, 2026
கோடை வந்தாச்சு.. இதோ சில டிப்ஸ்

➤மிக இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். ➤கறுப்பு நிறம் வெப்பத்தை ஈர்க்கும் தன்மை கொண்டதால் கறுப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது. ➤ உச்சி வெயில் நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் குடை பிடித்து செல்லலாம். ➤அடிக்கடி முகம் கழுவுவது சிறந்தது. ➤வியர்வை அதிகமாக வெளியேறும் என்பதால் 2 முறை குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.
News March 25, 2026
ஒதுக்கப்படாமல் கிடக்கும் 20 ஆயிரம் வீடுகள்

தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் சலுகை விலையில் 20,000 வீடுகள் விற்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை தொடர்ந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்று மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும், தேர்தல் முடிந்த பின் வீடுகள் ஒதுக்கீடு பணிகள் தொடரும் என்று துறை அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.


