News August 19, 2024

இந்திய மசாலாப் பொருட்களின் மாதிரிகளில் 12% தரமற்றவை!

image

இந்திய மசாலாப் பொருட்களின் மாதிரிகளில் 12% தரமற்றவை என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜூலையில் இந்தியாவில் பரிசோதிக்கப்பட்ட 4,054 இல் 474 மாதிரிகளின் தரம் & பாதுகாப்பு அளவீடுகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக FSSAI கண்டறிந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. MDH & எவரெஸ்ட் பிராண்டுகளின் தயாரிப்புகள் நுகர்வுக்கு தகுந்தவையல்ல எனக் கூறி நியூசி., அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளன.

Similar News

News August 11, 2025

உக்ரைனில் அமைதி திரும்ப உதவுவதாக PM மோடி உறுதி

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி PM மோடியுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ரஷ்யா – உக்ரைன் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளங்கியதாகவும், இரு நாடுகளிடையே அமைதி ஏற்பட அனைத்து உதவிகளையும் செய்வேன் எனவும் உறுதி அளித்ததாக PM மோடி தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். புதின் இந்தியா வரவுள்ள நிலையில், ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதை குறைக்க ஜெலன்ஸ்கி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

News August 11, 2025

கனமழை வெளுக்கும்.. கவனமா இருங்க மக்களே!

image

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தஞ்சை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை சென்னை, செ.பட்டு, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால், இரவில் வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே!

News August 11, 2025

தோனி வாக்குமூலம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

image

₹100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞரை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. IPL சூதாட்ட வழக்கு தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்து கூறியதாக IPS அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியாவுக்கு எதிராக 2014-ல் தோனி வழக்கு தொடர்ந்திருந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், நீதிபதி CV கார்த்திகேயன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!