News August 19, 2024
இந்திய ராணுவ முன்னாள் தளபதி மரணம்

இந்திய ராணுவ முன்னாள் தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் சென்னையில் காலமானார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அவர், ராணுவத்தில் சேர்ந்து 43 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்துள்ளார். குறிப்பாக, 2000 அக்டோபர் முதல் 2002 டிசம்பர் வரை ராணுவ தளபதியாக பதவி வகித்துள்ளார். ஓய்வுக்கு பிறகு சென்னையில் மனைவி, மகளுடன் வசித்து வந்த அவர், தனது 84ஆவது வயதில் காலமானார். நாளை மாலை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
Similar News
News March 23, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (22.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 23, 2026
புதுச்சேரியில் திமுக – காங் கூட்டணி உறுதியானது

புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் – திமுக கூட்டணி உறுதியானது. இதில் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. அதேசமயம் திமுகவுக்கு 12 தொகுதிகளும், விசிக மற்றும் CPI-க்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில், இன்று நள்ளிரவில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகிறது.
News March 23, 2026
அதிமுகவில் இணைந்த OPS ஆதரவாளர்கள்

திமுகவில் OPS இணைந்ததால் ஏமாற்றமடைந்த அவரது ஆதரவாளர்கள் தாய் கழகமான அதிமுகவிற்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை Ex துணை மேயர் மணிகண்டன், வெள்ளூர் Ex ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தஞ்சை மாவட்ட OPS ஆதரவாளர்கள், EPS-ஐ நேரில் சந்தித்து தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தனது ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக அதிமுகவில் இணைவதால் OPS கவலையில் உள்ளாராம்.


