News August 19, 2024

அஸ்வத்தாமன் பரபரப்பு வாக்குமூலம்

image

3 விஷயங்களில் மன உளைச்சலுக்கு ஆளானதால் தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்மதம் தெரிவித்தாக அஸ்வத்தாமன் வாக்குமூலம் அளித்துள்ளார். “ஒரக்காடு நிலப்பிரச்சனையில் என்னை உள்ளே நுழைய விடாமல் செய்தது, மீஞ்சூரில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயப்பிரகாஷை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் என் மீது புகார் அளித்தது, BSP மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கில் என் தந்தை நாகேந்திரனை குற்றவாளியாக சேர்த்தது” என்றார்.

Similar News

News March 11, 2026

JUST IN: சென்னையில் ஹோட்டல்கள் மூடல்!

image

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கேஸ் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள், டீ கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஹோட்டல்களை நம்பி வாழும் இளைஞர்கள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News March 11, 2026

சென்னை: கணவரை படுகொலை செய்த இளம்பெண்!

image

ஆவடியை அடுத்த கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(39), மனைவி மகேஸ்வரி(29). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் போதையில் வந்த அவர், மகேஸ்வரியின் தாலியை பிடித்து இழுத்ததால் ஆத்திரமடைந்தவர், அருகே இருந்த கேபிள் ஒயரால் அவரது கழுத்தை இறுக்கினார். இதில், ராஜேஷ்குமார் உயிரிழந்தார். மகேஸ்வரியை கைது செய்த போலீசார், உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

News March 11, 2026

மதுரவாயலில் பாலியல் சீண்டல்: வாலிபர் கைது!

image

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 41 வயது பெண், தனது மகன், மகளுடன் மார்ச் 8ம் தேதி மதுரவாயல் டேனியல் தாமஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்தபின், சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி சென்றார். புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையில் சுராஜா பத்ரா (24), நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!