News August 19, 2024
திருச்சி மாநகராட்சி யுடன் இணைக்க எதிர்ப்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மாடக்குடி கிராம மக்கள் தங்களது கிராமத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
Similar News
News May 8, 2025
திருச்சி: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!
News May 8, 2025
திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் செல்போன் எண்கள் (பாகம்-2)

▶️ மணப்பாறை – அப்துல் சமது (9500062790)
▶️ லால்குடி – ஏ. சௌந்தரபாண்டியன் (9942235277)
▶️ மண்ணச்சநல்லூர் – எஸ். கதிரவன் (9842475656)
▶️ முசிறி – என். தியாகராஜன் (9443838388)
▶️ ஸ்ரீரங்கம் – பழனியாண்டி (9443789999)
▶️ துறையூர் – எஸ்.ஸ்டாலின் குமார் (9787815511). SHARE செய்யவும்!
News May 8, 2025
திருச்சி மாவட்டத்தில் 231.4 மி.மீ மழை பதிவு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் நேற்றைய தினம் (மே.07) துறையூர் பகுதியில் அதிகபட்சமாக 45 மி.மீ, சிறுகுடியில் 30.2 மி.மீ, கு
புள்ளம்பாடியில் 28.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 231.4 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.