News August 19, 2024
வங்கி வாடிக்கையாளர்களுக்கு RBI எச்சரிக்கை

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி (RBI) எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், வங்கியில் கணக்கு வைத்துள்ள நபர்கள், தங்கள் கணக்கை வேறு நபர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. பணத்துக்கு ஆசைப்பட்டு பிறருக்காக பணம் பெறவோ, பணத்தை அனுப்பவோ செய்தால் சிறை செல்ல நேரிடும் என்று RBI கூறியுள்ளது. வங்கிக் கணக்கு விவரங்களை பிறருக்கு அளிக்க வேண்டாமென்றும் RBI கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News March 14, 2026
தவெகவுடன் கூட்டணியா? EPS-க்கு புது தலைவலி

அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து விஜய் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஒருவேளை அதிமுக கூட்டணியில் தவெக இணைந்தால் 50 – 60 சீட்களை கொடுக்க வேண்டும். அத்துடன் DCM பதவியையும் அளிக்க வேண்டும் என்ற டிமாண்ட்களும் வைக்க தவெக தயாராகவுள்ளதாம். ஏற்கெனவே கூட்டணி ஆட்சி ஆகாது என்ற கருத்தில் நிற்கும் EPS-க்கு இது புது தலைவலியை கொடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 14, 2026
சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது!

போர் சூழல் காரணாக சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ₹110-க்கு விற்பனையான 1 லிட்டர் பாமாயில் தற்போது ₹122 ஆக உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் ₹155லிருந்து ₹175 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விலையும் லிட்டருக்கு ₹5 வரை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News March 14, 2026
ஈரானின் கிரீடத்தில் மிகப்பெரிய தாக்குதல்

மத்திய கிழக்கு வரலாற்றில் ஈரானின் கிரீடமாக கருதப்படும் கார்க் தீவில் சக்திவாய்ந்த குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். கார்க் தீவில் உள்ள ஈரானின் ராணுவ நிலைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டதாக கூறிய அவர், அங்குள்ள எண்ணெய் கட்டமைப்பை அழிக்க விரும்பவில்லை; ஆனால், கப்பல்கள் செல்வது தடுக்கப்பட்டால், அதையும் அழிப்பேன் என்று எச்சரித்துள்ளார்.


