News August 19, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: பிரபல ரவுடியின் மனைவி கைது

image

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியை, ஆந்திராவில் தமிழக சிறப்புப்படை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 22 பேரை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, சுரேஷின் மனைவி பொற்கொடியை ஆந்திராவில் கைது செய்து, விசாரணைக்காக சென்னைக்கு போலீஸ் அழைத்து வருகிறது.

Similar News

News March 22, 2026

மணப்பெண்ணை நிர்வாணம் ஆக்கும் வினோத வழக்கம்

image

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள பினி கிராமத்தில் திருமணமான புதுமண தம்பதிகளுக்கென வினோத வழக்கம் ஒன்று நீண்ட காலமாக பின்பற்றப்படுகிறது. திருமணமான பிறகு புதுமணப்பெண் 7 நாள்களுக்கு ஆடையின்றி நிர்வாணமாக இருக்க வேண்டும். அதேபோல், புது மாப்பிள்ளை மது அருந்தக் கூடாதென்பதே அந்த வழக்கம் ஆகும். இந்த வழக்கத்தை கடைபிடித்தால் 2 பேருக்கும் கடவுள் ஆசிர்வாதம் கிட்டும் என நம்பப்படுகிறது. உங்கள் கருத்து?

News March 22, 2026

BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார்.. திடீர் திருப்பம்

image

புதுச்சேரி <<19448036>>அதிமுக வேட்பாளர்களை<<>> EPS இன்று அறிவித்த நிலையில், திடீர் திருப்பமாக அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக புதுச்சேரி அதிமுக துணை செயலாளரும் Ex MLA-வுமான வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார். மேலும், CM ரங்கசாமி முன்னிலையில் தன்னை NR காங்கிரஸில் இணைத்துக் கொண்டுள்ளார்.

News March 22, 2026

வாக்காளர்களுக்கு நற்செய்தி.. EC புதிய அறிவிப்பு

image

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகளை தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது. குடிநீர் வசதி, நிழற்குடை, கழிப்பறை, வாக்காளர்களுக்கு பெஞ்ச் வசதி உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டோவுடன் கூடிய வேட்பாளர்களின் போஸ்டர்களை வாக்குச்சாவடியில் ஒட்டுவதுடன், வாக்காளர் உதவி பூத், செல்போன் டெபாசிட் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!