News August 19, 2024
ஈரோடு: சான்றிதழ் பிழை திருத்தம் செய்ய வாய்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் +1, +2 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே பிழை இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இந்த சான்றிதழ்கள் சென்னை தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி, பிழை திருத்தம் அல்லது மாற்று அசல் சான்றிதழ் வழங்கப்படும் என ஈரோடு மாவட்ட பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News August 17, 2025
ஈரோடு: இரண்டு சிறுவர்கள் கைது

ஈரோடு, சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசியனூர் பகுதியில், ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து, 250 போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், பிரபல கொரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை செய்த போது, போதை மாத்திரை இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக 2 சிறுவர்களை பிடித்த போலீசார், மாத்திரைகளை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்துள்ளனர்.
News August 16, 2025
ஈரோடு: தெருநாய்கள் தொல்லையா? உடனே CALL

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தெருநாய்கள் கடித்ததால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை இருந்தால், பொதுமக்கள் புகார் அளிக்க, 0424-2220101 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . இதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News August 16, 2025
ஈரோட்டில் இலவச Tally பயிற்சி!

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GST பயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <