News August 19, 2024
மதுரையில் எஸ்ஐ வீட்டில் திருடியவர் கைது

மதுரை பரவையை சேர்ந்த சிறப்பு திறனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வீட்டில் சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த சமயநல்லூர் போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட வடுகபட்டியை சேர்ந்த கார்த்திக் கண்ணனை (33) நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 6, 2026
FLASH மதுரை: மின்சாரம் தாக்கி தந்தை & மகன் பலி

வாடிப்பட்டி, நாராயணபுரத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி(79). இவரது மகன் அரசு பஸ் டிரைவர் ஆதிநாராயணன்(55) இவரது தம்பி மகன் கல்லூரி மாணவர் கிருஷ்ணன்(20). 3 பேரும் தோட்டத்தில் மாட்டு தீவனம் சேகரித்த போது மின்சார வயர் அறுந்து கிருஷ்ணனின் மேல் விழுந்தது. அவரை காப்பாற்ற சென்ற மற்ற இருவர் உள்பட 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் ஆதிநாராயணன் & கிருஷ்ணன் பலியாயினர். சின்னதம்பி சிகிச்சையில் உள்ளார்.
News March 6, 2026
மதுரை: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News March 6, 2026
மதுரை: 710 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை

பிளஸ் டூ தேர்வு மார்ச் 2ம் தேதி ஓங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கிலம் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்டத்தில் இருந்து 16,471 மாணவர் 18,033 மாணவியர் உள்பட மொத்தம் 34,504 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வை 16,069, மாணவர் 17,725 மாணவியர், மொத்தம் 33,794 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 544 பேர் ஆப்சென்ட் ஆகினர்.


