News August 19, 2024
தேனியில் போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், சீலையம்பட்டி கம்பர் பள்ளித் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் திருமாறன் (19) ஆசைவார்த்தை கூறி, வெளியூர் அழைத்து சென்று விட்டதாக சிறுமியின் பெற்றோர் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சின்னமனூர் அருகேயுள்ள கூளையனூரில் தங்கியிருந்த சிறுமியை மீட்டனர்.
Similar News
News March 13, 2026
தேனி: மனைவி உள்ளிட்ட இருவருக்கு இரட்டை ஆயுள்

போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் ஹபிபுல்லா மனைவி அனீஸ் பாத்திமா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதற்கு இடையூறாக இருந்த ஹபிபுல்லாவை 2019-ம் ஆண்டு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் ஜெயபாண்டி, அனீஸ் பாத்திமா ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை நீதிபதி தீர்ப்பளித்தார்
News March 13, 2026
தேனி: துப்பாக்கிகளை ஒப்படைக்க போலீசார் அறிவுறுத்தல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தங்களது துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் பகுதிகளில் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் துப்பாக்கியை உடனடியாக ஒப்படைக்க வேண்டு எனவும் தெரிவித்துள்ளனர்.
News March 13, 2026
தேனி: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..


