News August 19, 2024

சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்ட பெண் குழந்தைகளுக்கு விருது

image

பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றும் 13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் விருதுக்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பெண் குழந்தைகள், விருது பெற விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டு குடிநீர் நிறுத்தம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் சீரமைப்பு பணிகள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. ஆகையால் இத்திட்டத்தில் பயன்பெறும் சீர்காழி மற்றும் செம்பனார்கோயில் ஒன்றியங்களை சேர்ந்த 30 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 21), நாளை குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 21, 2025

மயிலாடுதுறை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

மயிலாடுதுறை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் நாளை (ஆக.22) காலை 9 மணி முதல் 3மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பவுள்ளனர். மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை சேர் பண்ணுங்க.!

error: Content is protected !!