News August 19, 2024
விரைவு, மின்சார ரயில் சேவைகள் சீரானது

தாம்பரம் ரயில் பாதையில் நடைபெற்று வந்த மேம்பாட்டு பணிகள் நேற்று காலை வெற்றிகரமாக முடிவடைந்தன. பணிகள் முடிந்ததால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் நேற்று ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி ரயில் சேவை தொடங்கியது. இன்று முதல் புறநகர் மின்சார ரயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயங்கும் என்றும், விரைவு ரயில்களும் அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 17, 2025
ரயில்கள் தாம்பரத்திற்கு மாற்றம்

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18 வரை சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் கொல்லம் மெயில் மற்றும் குருவாயூர் விரைவு ஆகிய ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை தற்போது தாம்பரத்தில் இருந்து புறப்படும் நடைமுறையே தொடரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News August 16, 2025
செங்கல்பட்டு: இலவச 5G பயிற்சி; ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

செங்கல்பட்டு மக்களே தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் <
News August 16, 2025
செங்கல்பட்டில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

செங்கல்பட்டில், வாடகைக்கு குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!