News August 19, 2024

திருப்பதியில் தமிழர்கள் புறக்கணிப்பு?

image

திருப்பதியில் முக்கிய இடங்களில் இடம்பெற்றிருக்கும் தர்ம தரிசனம் குறித்த அறிவிப்பு பலகை ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கில் மட்டுமே இருப்பதால் தமிழ் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். தெலங்கானா அமைச்சர்கள் கொடுக்கும் சிபாரிசு கடிதங்களை கொண்டு வருபவர்களுக்கு VIP தரிசனம், தங்குமிடம் சுலபமாக கிடைப்பதாகவும், ஆனால் தமிழக அமைச்சர்களின் சிபாரிசு கடிதங்களை வாங்கவே மாட்டார்கள் எனவும் கூறுகின்றனர்.

Similar News

News November 4, 2025

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறை

image

1,000 குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால், USA-ல் செய்யாத கொலைக்காக, இந்திய வம்சாவளி சுப்ரமணியம் வேதம் 43 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். நிரபராதி என தீர்ப்பு வந்தாலும், அவரை நாடு கடத்த USA அதிகாரிகள் மீண்டும் சிறைபிடித்தனர். சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளரான சுப்ரமணியன் கோர்ட்டை நாட, நாடு கடத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

News November 4, 2025

மாதம்பட்டி ரங்கராஜ் கைதா?… பரபரப்பு தகவல்

image

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது குழந்தைக்கு அப்பா தான்தான் என்றும் <<18195589>>மாதம்பட்டி ரங்கராஜ்<<>> ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். இதனால், மாதம்பட்டி கைது செய்யப்படலாம்.

News November 4, 2025

கம்பெனிக்காக 17 ஆண்டுகள் உழைத்த நபர்.. கண்ணீர் பதிவு

image

17 ஆண்டுகள் கடுமையாக உழைத்தும் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ஊழியர் ஒருவரின் X பதிவு வைரலாகி வருகிறது. நான் வேலையிழப்பு வேதனையில் இருந்தபோது குழந்தைகளை முதல்முறையாக பள்ளிக்கு அனுப்பினேன். அப்போது அவர்கள் முகத்தில் தெரிந்த சிரிப்பு எனக்கு கண்ணீரை வரவழைத்தது. இதுவரை என்ன இழந்தேன் என இப்போது தெரிகிறது. நிறுவனங்கள் ஒருபோதும் தியாகத்தை மதிப்பதில்லை என அவர் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!