News August 19, 2024

பழனியில் கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

image

பழனி கீரனுார் அருகே உள்ள புங்கமுத்துரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வேலுச்சாமி (10) நேற்று பழனி அ.கலையம்புத்தூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். மாலை அக்ரஹாரம் பகுதி அருகே உள்ள கிணற்றருகில் வேலுச்சாமி சென்றபோது எதிர்பாராத விதமாக அதில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் வந்து சிறுவனின் உடலை மீட்டனர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 10, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால் 1930 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் செய்யவும். உங்கள் பணம் மோசடி நபர்களிடமிருந்து மீட்டு தரப்படும். வேறு வகையான சைபர் குற்றத்திற்கு புகார் செய்ய <>www.cybercrime.gov.in<<>> என்ற இணையத்தில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. யாரோ ஒருவருக்கு உதவும்!

News August 9, 2025

திண்டுக்கல்: தங்கத்துடன் இலவச திருமணம் FREE !

image

திண்டுக்கல்: காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ரூ.70 ஆயிரம் திட்ட மதிப்பில் (4 கிராம் தங்கம் உட்பட) இலவசமாக குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, கோயிலில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு பயனடைய SHARE பண்ணுங்க!

News August 9, 2025

திண்டுக்கல்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நூறுநாள் வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வண்ணம் வருகிற ஆக.12ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து BDO அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், அனைத்து ஒன்றியங்களிலும் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!