News August 19, 2024
5 ஆயிரம் செயற்கைக்கோள்கள்: மயில்சாமி

கொரோனா காலத்தில் 5 ஆயிரம் செயற்கைகோள்கள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரோ EX விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனுப்பப்படும் செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் 6-7 ஆண்டுகள் தான் எனவும், எனவே ஆயுட்காலம் ஒவ்வொன்றாக முடியும் தருவாயில், நாம் புதியவைகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ராக்கெட் ஏவுவதற்கு உலகிலேயே சிறந்த குலசேகரப்பட்டினம் தான் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 14, 2026
‘ஆசிரியர் தற்கொலைக்கு திமுக அரசே பொறுப்பு’

பகுதிநேர ஆசிரியர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசே பொறுப்பு என அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஊழல் பணத்தில் கொழுத்துத் திரியும் திமுகவினருக்கு, சாதாரண பொதுமக்களின் வலியும் வாழ்க்கையும் எப்படி புரியும் என அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். கண்ணனின் குடும்பத்திற்கு ₹50 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
News January 14, 2026
2-வது ODI: வெற்றியை நோக்கி நியூசிலாந்து

ராஜ்கோட்டில் நடக்கும் 2-வது ODI-ல், நியூசிலாந்து வெற்றி முகத்தில் உள்ளது. 285 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய NZ, முதல் 10 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பிறகு டேரில் மிட்செல், வில் யங் அபாரமாக ஆடி 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதி 10 ஓவர்களில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 58 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்கள் உள்ளன. NZ-ன் வெற்றியை தடுக்க இந்தியா என்ன செய்யணும்?
News January 14, 2026
இன்று ₹2,000, ₹5,000 ₹10,000

பொங்கல் பண்டிகை எதிரொலியால் தமிழகம் முழுவதும் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. முக்கிய மலர் சந்தைகளில் அதிகபட்சமாக மல்லிகைப்பூ ஒரு கிலோ ₹5,000, ₹10,000 முதல் ₹12,000 வரை விற்பனையாகிறது. அதேபோல கிலோ பிச்சிப் பூ ₹1,200, முல்லை ₹2,000 வரை விற்பனையாகிறது. கடும் பனிப்பொழிவு, மழையின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட வரத்து குறைவினால் மல்லிகைப்பூ விலை அதிகரித்துள்ளதாக பூ வியாபாரிகள் கூறுகின்றனர்.


