News August 18, 2024
ALERT STUDENTS: நாளை பள்ளிகள் செயல்படும்

தமிழகத்தில் நாளை ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால், ஏற்கெனவே வழங்கிய விடுமுறையை ஈடு செய்ய வேண்டியுள்ளதால், அதுபோன்ற பரிசீலனை எதுவும் இல்லை என கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், விடுமுறை என்றால் முன்னதாக அறிவிக்கப்படும் என விளக்கமளித்த அவர்கள், நாளை வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் என கூறியுள்ளனர்.
Similar News
News August 15, 2025
நாகையில் 193 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

நாகை மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளில் இன்று (ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவை பற்றி அலோசிக்கப்பட உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளர்.
News August 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 15, 2025
GOOD NEWS: எப்போதும் வாழாதவர்களாக இருக்காதீர்..

‘மனிதரிடம் நீங்கள் காணும் வியப்பான விஷயம் எது?’ என தலாய்லாமாவிடம் கேட்க,“பணத்தை சம்பாதிக்க ஆரோக்கியத்தை மறுத்து உடல்நலத்தை கெடுத்து கொள்கிறார்கள். சம்பாதித்தபின் உடல்நலனுக்கு செலவிடுகின்றனர். அதேபோல எதிர்காலம் பற்றிய பதற்றத்தில் நிகழ்காலத்தை அனுபவிக்க தவறுகிறார்கள்… இவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை, எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. எப்போதும் வாழாதவர்களாகவே இருந்து இறந்து போகிறார்கள்” என்றார்.