News August 18, 2024
நெல்லையில் கபாடி போட்டி – அமைச்சருக்கு அழைப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் மாதம் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் நெல்லையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ் ஏற்பாட்டில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபாடி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விஎஸ்ஆர். ஜெகதீஷ் இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
Similar News
News October 25, 2025
நெல்லை: மழைக்கால அவசர உதவி மைய எண்கள் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மழைக்காலத்தில் மக்களுக்கு அவசர உதவிக்கான தொடர்பு எண்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மைய எண் 1077 மற்றும் 0462501070 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் காவல்துறை, தீயணைப்பு துறை மருத்துவம் போன்ற பிற சேவைக்கான எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
News October 24, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.24] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜிக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News October 24, 2025
நெல்லை: சிறப்பு வார்டு கூட்டங்கள் தேதி அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சிறப்பு வார்டு கூட்டங்கள் வருகிற 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. வார்டு உறுப்பினர்கள் தலைமையில் இந்த கூட்டங்கள் நடைபெறும் முன்னுரிமை அடிப்படையில் மூன்று முக்கிய கோரிக்கைகள் தேர்வு செய்யலாம் உங்கள் பகுதியில் நடைபெறும் கூட்ட இடம் விபரத்தை வார்டு உறுப்பினரிடம் தெரிந்து கொள்ளலாம்.


