News August 18, 2024
பாதுகாப்பு இல்லாதபோது கடமையை எப்படி செய்வார்கள்?

பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வேண்டுமென ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். WB அரசுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், மருத்துவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலில் அவர்கள் கடமையை அர்ப்பணிப்புடன் செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? எனவும், குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். நடவடிக்கைக்கான நேரமிது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 15, 2025
GOOD NEWS: எப்போதும் வாழாதவர்களாக இருக்காதீர்..

‘மனிதரிடம் நீங்கள் காணும் வியப்பான விஷயம் எது?’ என தலாய்லாமாவிடம் கேட்க,“பணத்தை சம்பாதிக்க ஆரோக்கியத்தை மறுத்து உடல்நலத்தை கெடுத்து கொள்கிறார்கள். சம்பாதித்தபின் உடல்நலனுக்கு செலவிடுகின்றனர். அதேபோல எதிர்காலம் பற்றிய பதற்றத்தில் நிகழ்காலத்தை அனுபவிக்க தவறுகிறார்கள்… இவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை, எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. எப்போதும் வாழாதவர்களாகவே இருந்து இறந்து போகிறார்கள்” என்றார்.
News August 15, 2025
CSK வீரருக்கு அடித்த ஜாக்பாட்: அஸ்வின்

CSK வீரர் Devald Brevis-க்கு கடந்த IPL சீசனில் ஜாக்பாட் அடித்ததாக, அந்த அணியின் ஸ்டார் பவுலர் அஸ்வின் தெரிவித்துள்ளார். அவரை வாங்குவதில் கடும் போட்டி நிலவியதால், அதிக விலை கொடுத்து எடுத்ததாக கூறியுள்ளார். அவரது அடிப்படை விலை ₹75 லட்சமாக இருந்த நிலையில், ₹2.2 கோடி கொடுத்து CSK வாங்கியதாக தெரிவித்துள்ளார். குர்ஜப்னீத் சிங்கிற்கு காயம் ஏற்பட்டதால் மாற்று வீரராக Brevis வந்தார்.