News August 18, 2024

வாய்க்காலில் கிடந்த கணவன் உடல்: கரூர் அருகே அதிர்ச்சி

image

கரூர்: ரெங்கபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமியை காணவில்லை என அவரது மனைவி ஜெயா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஜெயா புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சின்ன தாராபுரம் அருகே வாய்க்காலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினர் மூலம் உடல் மீட்கப்பட்டது. அது காணாமல் போன பொன்னுசாமி என்பது தெரியவந்தது.

Similar News

News September 19, 2025

கரூரில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

image

மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் தீர்க்கும் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’, கரூர் நாடாளுமன்றத்திற்குட்பட்ட தாந்தோணி சட்டமன்ற தொகுதியில் இன்று (செப்.19), வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் விஜயபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News September 19, 2025

கரூர்: 116 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள ஆதனூரைச் சேர்ந்த பொன்னுசாமி (வயது 116) தன்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் மருத்துவமனைக்குச் செல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தவர். அவருக்கு 2 மகன்கள், 5 பெண் குழந்தைகள், 15 பேரக்குழந்தைகள் மற்றும் 18 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். வயது முதிர்வு காரணமாக அவர் இயற்கை மரணமடைந்த நிலையில், அவரது உடல் பூந்தேரில் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

News September 18, 2025

கரூர்: காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

image

கரூர் மாவட்ட காவல்துறை, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், “போதைப்பொருட்கள் உங்களைக் கட்டுப்படுத்த விட வேண்டாம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. “Just Say NO to Drugs” போன்ற வாசகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களை 9498100780 என்ற வாட்ஸ்அப் (அ) 100-க்கு தகவல் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!