News August 18, 2024
சட்ட விரோத மின்சார வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை

தின்டிவனம் அடுத்த சிறுவாடி கிராமத்தில் மாதவன் (56) என்பவர் மாடு மேய்க்க சென்ற போது மின்சார கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் துறை செய்தி குறிப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் யாரேனும் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்தால் அவர்களின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது.
Similar News
News August 28, 2025
கீழ் புத்துப்பட்டு பீச்சுக்கு நீலக் கொடி சான்றிதழ்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள கீழ் புத்துப்பட்டு உட்பட தமிழகத்தில் உள்ள ஆறு கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக தமிழக அரசு 24 கோடி ரூபாயை இன்று ஆகஸ்ட் 28 வியாழக்கிழமை ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இந்த கடற்கரைகளில் சுற்றுப்புற சூழல் சீர்கெடாத வண்ணம் சுத்தமாக பராமரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 28, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் 1700 விநாயகர் சிலைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சிலை அமைப்புக் குழுக்கள், பொதுமக்கள் சாா்பில் மொத்தமாக 1,700 விநாயகா் சிலைகள் சுமாா் 3 அடி முதல் 10 அடி உயரத்தில் வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிலை வைக்கப்பட்டுள்ள பதற்றமான இடங்களில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு ரோந்து வாகனங்களில் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News August 28, 2025
விழுப்புரம்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539572>>தொடர்ச்சி <<>>