News August 18, 2024
ரூ. 5 லட்சம் மோசடி செய்த போலி பெண் ஆர்.ஐ கைது

வாலாஜா தாலுகா சிப்காட் அருகே மாணிக்கம்மாள் என்பவருக்கு சொந்தமாக 2 1/2 நிலம் உள்ளது. 1.13 கோடி மதிப்பிலான இந்நிலத்தில் சிப்காட் அமைக்க அரசு கையகப்படுத்தியுள்ளது. எனவே அரசிடமிருந்து பணத்தை விரைந்து பெற்று தருவதாக போலி பெண் ஆர்.ஐயான சுவாதி , ஜெயகாந்தன், பரத் ஆகியோர் ரூ. 5 லட்சத்தை மாணிக்கம்மாளின் மகள் மெர்லின் ஜெனிபரிடம் நேற்று வாங்கியுள்ளனர். போலி என தெரிந்து டவுன் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
Similar News
News September 11, 2025
ராணிப்பேட்டை: மாதம் ரூ.1000 பெற, இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <
News September 11, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (செப்-12) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை டேக் ஹோண்டா கிளப் TNHB அரக்கோணம், வன்னியர் திருமண மண்டபம் தென் வன்னியர் தெரு சோளிங்கர், ராகவேந்திரா மஹால் அவளூர், செயின்ட் ஜான் பள்ளி தென்றல் நகர் சீகராஜபுரம் ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.பொதுமக்கள் மகளிர் உரிமை தொகை, புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம்.
News September 11, 2025
சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசிய நபர் கைது

வாலாஜா சார்ந்த புகைப்படக் கலைஞர் கிருஷ்ணன், தனது சமூக வலைத்தளத்தில் இரு மதத்திற்கு இடையே பிரிவினையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். இதைதொடர்ந்து, ராணிப்பேட்டை, மேல்விஷாரம் மற்றும் வாலாஜாவைச் சேர்ந்த தமுமுக, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, மஜக உள்ளிட்ட நிர்வாகிகள் வாலாஜா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், காவல்துறையினர் கிருஷ்ணனை கைது செய்தனர்.