News August 18, 2024
திண்டுக்கல்லில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று வழிபாடுகள் நடந்தன. அபிராமி அம்மன், வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், சிறுமலை வெள்ளிமலை சிவன் கோயில், அகஸ்தியர்புரம் அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, நந்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News August 22, 2025
திண்டுக்கல்: ‘வாட்ஸ் ஆப்’மூலம் ரூ.8 லட்சம் அபேஸ்!

திண்டுக்கல்: சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுலைமான் சேட்(52. வியாபாரியான இவரது எண்ணிற்கு சில நாட்களுக்கு முன் குறுந்தகவலில் ’இணையதளம் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக வருமானம் பெறலாம்!’ எனக் கூறி அவரை குழுவில் இணைத்து, சுமார் ரூ.8 லட்சம் வரை வாங்கி ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற நபர்கள் உங்களை அணுகினால் உடனே 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
News August 22, 2025
திண்டுக்கல்: மாரத்தான் ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வாருங்கள் ஓடுவோம், வாசிப்பை நோக்கி என்ற குறிக்கோளுடன் 23-ம் தேதி காலை 06.00 மணிக்கு டட்லி பள்ளி மைதானத்திலிருந்து அங்குவிலாஸ் பள்ளி மைதானம் வரை “விழிப்புணர்வு மாரத்தான்” நடத்தப்படவுள்ளது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 21, 2025
திண்டுக்கல்லில் கூட்டுறவு வங்கியில் வேலை APPLY NOW!

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 32 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <