News August 18, 2024

மூலிகை: தோல் நோய்களைப் போக்கும் நல்வேளை

image

நாட்பட்ட தோல் நோய்களை சரிசெய்யும் ஆற்றல் மாலை மங்கும் வேளையில் பூக்கும் நல்வேளை செடிக்கு இருப்பதாக சித்த நூல் கூறுகிறது. கெப்பாரிடேசியே, பீட்டா-கரோடீன், க்ளியோகைனால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள அதன் இளம் இலைகளை தேங்காய் எண்ணெய்யில் வெள்ளைப் பூண்டோடு சேர்த்துக் காய்ச்சி, உடலுக்கு தேய்த்துக் குளித்தால் உடலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமை, பாக்டீரியா & பூஞ்சைத் தொற்றுக்கள் நீங்குமாம்.

Similar News

News October 30, 2025

சாப்பிட்டதும் இத உடனே பண்ணாதீங்க!

image

நம்மில் பலரும் சாப்பிட்ட உடன் பல வேலைகளை உடனடியாக செய்வோம். சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்று நினைத்து நாம் செய்யும் சில செயல்கள், உண்மையில் நமது செரிமான மண்டலத்தைப் பெரிதும் பாதித்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கக்கூடியவை என்பது பலருக்கு தெரிவதில்லை. அப்படி சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள மேலே SWIPE பண்ணி பாருங்க…

News October 30, 2025

வங்கி கடன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்

image

அக்டோபர் மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதத்தை 0.05 சதவீதம் வரை குறைத்துள்ளன. இதன் விளைவாக, இந்த வங்கிகளில் வீடு மற்றும் வாகன கடன் பெற்றவர்களின் மாதாந்தர தவணை (EMI) நவம்பர் மாதம் முதல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News October 30, 2025

Currency, Airport இல்லை.. ஆனால் உலகின் பணக்கார நாடு இது!

image

லிச்சென்ஸ்டீன் (Liechtenstein) சுவிட்சர்லாந்தின் நாணயத்தையே பயன்படுத்துகிறது. 38,000 பேர் மட்டுமே வசித்தாலும், தனிநபர் ஆண்டு வருமானம் சுமார் ₹1.75 கோடியாம். இது USA, ஜப்பானை விட அதிகம். வரி குறைவு என்பதால், பல முன்னணி நிறுவனங்களும் இங்கு தொழில் தொடங்குகின்றன. மேலும், உயர் கல்வி & தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், வலுவான வங்கித் துறை ஆகியவற்றால் ஐரோப்பாவின் 2-வது பணக்கார நாடாக லிச்சென்ஸ்டீன் உள்ளது.

error: Content is protected !!