News August 18, 2024
வேலூரில் தேசிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24- ல் மாநில அரசின் விருது பெற சிறந்த சேவை மற்றும் வீரதீர செயல் புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் பாராட்டு பத்திரம் மற்றும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படும். எனவே தகுதியானவர்கள் (http://awards.tn.gov.in) என்ற இணையதள பக்கத்தின் வாயிலாக 30.09.2024க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 10, 2025
வேலூர் மக்களே கனமழை எச்சரிக்கை – உஷார்!!

வேலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நேற்றை போலவே இன்றும் (ஆக.10) இரவு வரை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை வர வாய்ப்புள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம். உணவு, மெழுகுவர்த்தி, விளக்கு போன்ற அத்தியாவசிய பொருட்களை எளிதாய் எடுக்கும் வண்ணம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சொல்லுங்க.
News August 10, 2025
முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் கலந்தாய்வு

வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில், முதுநிலை பட்டப்படிப்புகளில் உள்ள 240 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 11) தொடங்குகிறது. இதில் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, அதனைத் தொடர்ந்து 13ஆம் தேதி பொது கலந்தாய்வு நடைபெறும். www.tngasa.in என்ற இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
News August 10, 2025
வேலூரில் இப்படியொரு அதிசயமா!

வேலூர் மாவட்டம் ரங்காபுரம் மலைமேல் அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவில் உள்ளது. மே மாதம் பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்த பிறகு அவரின் தலை மீது பூ வைக்கப்படும். அதில் 1 எலுமிச்சை பழம் வைப்பார்கள். அதில் ஒரு ஈ பறந்து வந்து சில வினாடிகள் அமர்ந்து விட்டு பறந்து சென்றுவிடும். பின், பழம் தானாக சுற்றி கீழே விழும். அதை ஒருவர் பிடித்து கொள்வார். பிறகு அருள்வாக்கு சொல்லப்படும். ஷேர் செய்யுங்கள்